Date : 1st Dec 2011
Posted By : Admin
ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலமாக்கும் :: விளக்கம் இதையும் ஒரு ஜோதிடர் விளக்கியுள்ளார் ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலமாக்கும் என்பார்கள். ஆனால் "ஆனி மூலம் அரசாளும், கன்னி மூலம் நிர்மூலம்" என்பதுதான் உண்மையான பழமொழி ஆகும். இதன் பொருள் ஆனி மாதத்து மூலம் நக்ஷத்திரம் பௌர்ணமி திதியில் வரும். கன்னி மூலம் எனப்படும் புரட்டாசி மாதத்தில் வரும் மூல நக்ஷத்திரம் அஷ்டமி திதியில் வரும். அதன்படி ஆனி மாதத்து மூலம் வரும் நாள் சிறப்பானது என்றும், புரட்டாசி மாதத்தில் வரும் மூல நக்ஷத்திரம் சிறப்பானது அன்று என்பதயும் உணர்த்தத்தான் இந்த பழமொழி ஏற்பட்டது. காலப்போக்கில் இந்த பழமொழிக்கு தவறாக பொருள் கொள்ளப்பட்டது.